ஒருவர் தான் தெரிவு செய்துள்ள மதத்தினை அல்லது மத நம்பிக்கையை அனுபவிப்பதற்கு அல்லது சுவீகரிப்பதற்குரிய சுதந்திரம் உள்ளிட்ட மதம்சார் சுதந்திரம், சிந்தனை சுதந்திரம் மற்றும் மனச்சாட்சி என்பவற்றை முழுமையாக அனுபவிக்கும் உரிமையானது ஒவ்வொரு நபருக்கும் உரித்துடையதாகின்றது என இலங்கை அரசியல் அமைப்பில் கூறப்பட்டுள்ளது.


அதேவேளையில் அரசியல் அமைப்பு மற்றும் வேறு சட்டங்கள் பௌத்த மதத்திற்கு முதன்மையான ஓர் இடத்தை வழங்குவதோடுஅரசும் அதனை பாதுகாக்கும் பொறுப்பினை ஏற்றுக்கொள்கிறது. கடந்த தேர்தல் காலங்களை உற்றுநோக்கினால் கூட , அநேகமான பிராசரங்களில் பௌத்த மதத்துக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் மிக வெளிப்படையாக கூறப்பட்டது .பொதுபல சேனா (பௌத்த பேரினவாத அமைப்பு ) சிறுபான்மை இனங்களையும் மத உறுப்பினர்களையும் நோக்கி நாட்டினுடைய பௌத்த மக்களின்மேலாதிக்கத்தை விரோதமானமுறையில் பிரச்சாரப்படுத்தி வருவதோடு அதனை தொடர்ச்சியாக ஊக்குவித்து கொண்டுள்ளது.


இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் பின்னரான காலப்பகுதியில் இந்துக்கள் செறிந்தது வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அத்து மீறிய பௌத்த பரம்பல் அதிகரித்து வருகிறது .அதாவது இந்து ஆலயங்கள் அழிக்கப்படுவதுடன் ஆலய வளைவு உடைக்கப்படல், பௌத்தர்கள் வாழ்த்திராத பகுதியில் விகாரைகள் அமைக்கப்பட்டல் போன்றவை பரவலாக இடம் பெற்று வருகிறது.


2019 ம் வருடம் இத்தைகைய அத்துமீறல்கள் அதிகம் இடம்பெற்ற வருடம் என்றே சொல்லலாம். அதில் குறிப்பிடத்தக்க ஒரு விடயமாக முல்லைத்தீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வாளகத்துக்குள் நீதிமன்ற கட்டளையை மீறி பொதுமக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் குறித்த ஆலய வளாகத்துக்குள் அடாத்தனமாக குறுகந்த புராண ரஜமஹா விகாரை என்னும் பெயரில் விகாரை அமைத்து தங்கியிருந்த சர்ச்சைக்குரிய பௌத்த பிக்குவானா மேகாலங்கார கீர்த்தியின் பூத உடல் குறித்த பிள்ளையார் ஆலய தீர்த்த கேணி பகுதியில் தகனம் செய்யப்பட்டது. நீதிமன்ற தீர்ப்பை நடைமுறை படுத்த வேண்டிய போலீசார் இவ் நிகழ்வை வேடிக்கை பார்த்ததோடு மட்டும் அல்லாது தகனம் முடியும் வரை பூரண பாதுகாப்பை வழங்கியிருந்தனர். இது இந்து சமூகம் மற்றும் மனித உரிமைகளை பேணும் தன்னார்வர்களிடையே பாரிய ஒரு அச்சத்தை ஏற்படுத்தியது .


அடுத்த சர்ச்சைக்குரிய விடயமாக கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் கோவில் தாக்குதலுக்கு உள்ளாக்கபட்டத்தை கூறலாம் .இலங்­கா­புரி வேந்தன் இரா­வ­ண­னுடன் தொடர்­பு­பட்­டதும் ஆன்­மீக உலகின் அதி­சயம் எனப் போற்­றப்­படும் ஏழு வெந்­நீ­ரூற்­றுக்­களைக் கொண்­டதும், தட்­ஷண கைலாச புராணம், வீர­சிங்­காத புராணம், திரு­கோ­ணா­சல புராணம் போன்ற பல்­வேறு புரா­ணங்­களால் விதந்­து­ரைக்­கப்­பட்ட பெருமை கொண்­டதும், அகத்­திய மாமு­னியின் மனம்கவர்ந்த புண்­ணிய தலங்களைக் கொண்­ட­து­மான இட­மாக கன்னியா இருந்து வந்­துள்­ளது. இங்கிருந்த பூர்­வீ­க­மான பிள்­ளையார் ஆலயம் அமைந்­தி­ருந்த இடத்தில் பௌத்த தாதுகோபு­ர­மொன்றை அமைக்க, வில்கம் விகாரை பிக்­குமார் எடுத்­து­வரும் பிர­யத்­த­னங்­க­ளுக்கு தொல்­பொருள் திணைக்­க­ளமும் உடந்­தை­யாக இருந்து வந்தது . பிள்­ளையார் ஆலயம் இருந்த பூர்­வீக மேட்டை உடைத்து பௌத்த தாது கோபுரம் அமைக்க எடுத்த முயற்­சிக்கு தடை விதிக்­கப்­பட வேண்­டு­மென்ற தீர்­மானம் கடந்த ஜூன் 7 ஆம் திகதி (07.06.2019) நடை­பெற்ற திரு­மலை மாவட்ட ஒருங்­கி­ணைப்புக்குழுக்­கூட்­டத்தில் எடுக்­கப்­பட்­டது.


இத்­தீர்­மா­னத்­தையும் பொருட்­ப­டுத்­தாமல் வில்கம் விகாரை விகா­ரா­தி­பதி மீண்டும் தாதுகோபு­ரத்தை அமைக்கும் முயற்­சியை தீவி­ரப்­ப­டுத்­திய நிலை­யி­லேயே இரா­வ­ண­சேனை, கன்­னியா மர­பு­ரிமை அமைப்பு மற்றும் தென்­க­யிலை ஆதீனம் 2019.07.16 தேதி­யன்று கவ­ன­யீர்ப்பு போராட்­ட­மொன்றை நடத்­தி­யது. அத்­துடன் திரு­கோ­ண­மலை மடத்­தடி, மாரி­யம்மன் ஆலய தர்­ம­கர்த்­தாவும், கன்­னியா வெந்­நீ­ரூற்று மற்றும் பிள்­ளையார் ஆலய தர்­ம­கர்த்­தாவும் நம்­பிக்கைப் பொறுப்­பா­ள­ரு­மா­ன திரு­மதி.கோகி­ல­ர­மணி என்­பவர் மேற்­படி பெளத்­த­மத ஆக்­கி­ர­மிப்­புக்கு எதி­ராக, ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணியும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­ன எம்.ஏ.சுமந்­தி­ரனின் ஆலோ­ச­னைக்­க­மைய திரு­கோ­ண­மலை, மேல் நீதி­மன்றில் 22.07.2019 வழக்­கொன்றை தாக்கல் செய்து ஐந்து தடை­ ஆ­ணை­களை விதிக்­கும்­படி கோரி­யி­ருந்தார்.அதற்கமைய நீதிமன்றம் பின்­வரும் தடை­யா­ணைகள் கடந்த 22.07.2019 ஆம் திகதி தடை­ ஆணை பிறப்­பிக்­கப்­பட்­டது.



1. கன்­னியா வெந்­நீ­ரூற்­றுக்கு அரு­கில் பிள்­ளையார் கோயில் இருந்­த­ இ­டத்தில் பௌத்த விகாரை கட்­டு­வ­தற்கு தடை­வி­தித்து மன்று இடைக்­கால கட்­டளை பிறப்­பிக்­கின்­றது. குறிக்­கப்­பட்ட கட்­டளை வழக்கு முடியும் வரை அமுலில் இருக்கும்.

2. மனு­தா­ர­ரையோ அல்­லது மற்­றைய பக்­தர்­க­ளையோ கன்­னியா வெந்­நீ­ரூற்­றுக்கோ பிள்­ளையார் கோயி­லுக்கோ செல்­வதை தடுக்கக்கூடாது எனவும் அத்­துடன் அனு­மதி சீட்டு விற்­ப­னைக்கு தடை விதித்தும் இடைக்­கால கட்­டளை மன்­றினால் பிறப்­பிக்­கப்­ப­டு­கி­றது.

3. மனு­தாரர் மாரி­யம்மன் கோயி­லுக்கு உரித்­தான காணி­களில் புனர்­நிர்­மாண வேலைகள் செய்­வதை தடுக்­கக்­கூ­டாது என இடைக்­கால கட்­டளை மன்­றினால் பிறப்­பிக்­கப்­ப­டு­கி­றது.

4. மனு­தா­ர­ரையோ அல்­லது அவர்­க­ளது முக­வர்­க­ளையோ கன்­னி­யாவில் இருக்கும் மாரி­யம்மன் கோயி­லுக்கு உரித்­தான, ஆத­னங்­களை நிர்­வ­கிப்­பதை தடுக்­கக்­கூ­டாது என இடைக்­கால தடை விதிக்­கப்­ப­டு­கி­றது.


இத்தகைய பூர்வீகமும் வரலாற்றுப் புகழும் கொண்ட பிரதேசத்தை பௌத்த மயமாக்கி அருகிலுள்ள விகாரையொன்றின் அதிகாரத்துக்கு கீழ் கொண்டுவரும் வேட் டையானது திருகோணமலை மாவட்ட தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றி உலக இந்துக்களுக்கும் விடுக்கப்படும் சவாலா கவே மாறிவரும் நிலையில்தான் மேற்படி இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப் பட்டமை ஆறுதலைத் தருகின்றது.


கடந்த வருடத்தின் இறுதி பகுதியில் அதாவது டிசம்பர் மாதம் , யாழ். மாநகர சபை எல்லைக்குட்பட்ட பண்ணைக் கடற்கரைக்கு அருகில் புதிய சிறைச்சாலை வளாகத்துக்கு முன்பாக புனரமைப்புப் பணி என்ற போர்வையில், சில நாட்களாக வேலைத் திட்டங்கள் நடைபெற்று, கட்டடம் ஒன்றும் கட்டப்பட்டது. அங்கு உதவி சிறைச்­சாலை அத்­தி­யட்­ச­க­ராகக் கட­மை­யாற்­று­ப­வரின் வழி­காட்­ட­லி­ல் புத்தர் சிலை சிறைச்­சா­லைக்கு முன்­பாக வீதியில் அமைக்­கப்­பட்­டது. இது மக்களின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் குறித்த இடத்தி ல் இருந்து நீக்கப்பட்டது.


இவ் நிகழ்வுகள் இந்து மக்களிடையே பாரிய அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போதைய அரசாங்கமும் ஜனாதிபதியும் வெளிப்படையாகவே பௌத்த வாதத்தினை தெரிவிப்பதால் நாட்டில் உள்ள பௌத்த பேரினவாத அமைப்புகளால் இந்துக்களுக்கும் பிற மதத்தவருக்கும் அவர்கள் தங்கள் மதச்சுதந்திரத்தை அனுபவிப்பதற்கு தடைகள் ஏற்படக்கூடிய ஒரு அச்ச நிலை ஏற்பட்டுள்ளது . நாட்டில் உள்ள அனைவரும் தமது உரிமைகளை அனுபவிப்பதை உறுதி செய்யும் கடமை அரசாங்கத்துக்கு உரியது. பொறுத்திருந்து பாப்போம் அரசியல் அமைப்பின் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் மத சுதந்திரம் எதுவித இடையூறும் இன்றி கிடைக்குமா என்று???

Comment Here

Guidelines to be Followed

#MinorMatters welcomes blog posts and articles that are original and thought provoking, written in a tone that is clear, respectful and engaging. All contributions will be curated prior to publication and contributors will be expected to adhere to the following guidelines as minimum standards for submission.

Accuracy

Only present as fact and/or information content that can be independently verified or content that is appropriately sourced from a reputed third party.

Fairness and thoroughness

Acknowledge that there may be multiple sides to any given issue and present your readers with information that is complete, comprehensive and contextual.

Privacy

We will not publish content that infringes a group or individual’s right to privacy, except in exceptional circumstances where there is a clear and valid public interest in doing so.

Transparency and accountability

Disclose your sources, deal openly with your readers and be accountable for what you submit.

Language

Be considerate of your readers. Do not use language that is obscene or explicit or racist. Do not employ threats, personal attacks or insults.

Disclaimer: the views and opinions expressed in each blog post belong solely to theirauthor and do not necessarily reflect the policies or position of #MinorMatters. Comments on the blog are the sole responsibility of their writers. #MinorMatters reserves the right to withhold publication of blog posts and comments that do not meet the website’s standards and requirements.