இலங்கையில் வடக்கு பகுதியை பொறுத்தவரையில் அதிகளவாக தமிழ் பேசும் மக்களே வாழ்ந்து வருகின்றார்கள். கடந்த 30 ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டு போரானது அரசியலை பற்றிய சிந்தனையை மக்களிடம் விதைக்கவில்லை. தமிழ் மக்களை பொறுத்தவரையில் இலங்கை இராணுவமாக இருந்தாலென்ன விடுதலை புலிகளாக இருந்தாலென்ன ஆயுததாரிகளின் அடக்கு முறைக்குள்ளேயே வாழ்ந்திருந்தார்கள்.


தமிழ் மக்களுடைய ஜனநாயக முறைமைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டிருந்தது மக்களுக்காக ஒரு ஆயுதம் தாங்கிய அமைப்பே சிந்தித்தது முடிவெடுத்தது.


யுத்தம் முடிவடைந்து இரு தரப்பு ஆயுதங்களும் மௌனிக்கப்பட்டதன் பின்னணியில், விடுதலைப்புலிகளின் துப்பாக்கியின் நிழலில் தூங்கிக் கொண்டிருந்த மதவாத, சாதிவாத அமைப்புக்கள் துயில்கலைத்து எழுந்து தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இனவாத, மதவாதம் எனும் விசத்தை தொற்று நோயாக பரப்ப ஆரம்பித்தன.


2020 ஆம் ஆண்டு தேர்தல் காலமாக அறிவிக்கப்பட்டதிலிருந்து சிவசேனை என்ற அமைப்பின் பெயரில் வடக்கு மாகாணம் எங்கும் தமிழ் தேசியம் காக்க சைவ வாக்காளர்கள்; யாவரும் சங்கங்கள்,உள்ளுராட்சி சபைகள், மாகாணசபை மற்றும் பாராளுமன்ற தேர்தலில் சைவமும் தமிழும் காக்கும் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்ற பதாதைகள் ஒட்டப்பட்டிருந்தது.


இலங்கையில் சிவசேனையின் தோற்றுவாய் என்ன அதன் காரணம் எவ்வாறானது என்றும் அதன் நோக்கம் குறித்து ஆழமாக பார்க்க வேண்டிய தேவை உள்ளது.


இந்தியாவில் இயங்கிவரும் சிவசேனை அமைப்பு கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மக்களிற்கு எதிராக வன்முறைகளில் இறங்கி அவர்களை இம்சித்து வருவதுடன் இடதுசாரிகள் மற்றும் முற்போக்காளர்கள் கல்விமான்களை அழித்து மூட நம்பிக்கைகளை விதைத்து வருகின்றது.


யாழ்ப்பாணத்தில் தோற்றுவிக்கப்பட்ட சிவசேனை அமைப்பை ஒரு இந்துதத்துவ அமைப்பாக பார்ப்பதைவிட அதை ஒரு அடிப்படைவாத அமைப்பாக புரிந்து கொள்வதே சரியானது. வடக்கில் தொற்றுவிக்கப்பட்டுள்ள சிவசேனை என்ற தீவிரவாத அமைப்பானது எந்த உந்துவிசையில் இயங்குகிறது என்பது முக்கியமாக பார்க்கப்பட வேண்டியதாக இருக்கின்றது.


இலங்கையில் இந்து மன்றங்கள், சைவ பரிபாலன சபை, இந்து வாலிபர் சங்கம், இந்து ஊழியர் சங்கம் மற்றும் சுத்தானந்தா இந்து இளைஞர் மன்றங்கள் என நூற்றுக்கணக்கான அமைப்புக்கள் இயங்கி வருகின்றன. ஆனால் இந்த இந்து அமைப்புக்கள் ஒரு போதும் பிற மதங்களுக்கு எதிராக இயங்கியது கிடையாது.


இலங்கையில் மத முரண்பாடுகளால் வன்முறை நடைபெற்றிருக்கவில்லை. இலங்கையில் நடைபெற்ற வன்முறைகளுக்கு காரணம் இன முரண்பாடுகள்தான் என்பதற்கு மாற்றுக்கருத்து இருக்க முடியாது.


ஈழத்தமிழர்களான சைவர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையே உள்ள பிணைப்பு மதத்தை கடந்தது. தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட யுத்தத்தில் வடபகுதியில் எத்தனை கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டது. தேவாலயங்களில் தஞ்சமடைந்திருந்த மக்கள் குண்டுவீச்சின் மூலம் கொல்லப்பட்டிருந்தார்கள். ஈழத்தமிழர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசப் சர்வதேச அளவில் தொடர்ச்சியாக குரல் கொடுத்து இலங்கை அரசாங்கத்தின் வெறுப்பை சம்பாதித்தவர். சைவர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் மதப்பூசலே இருந்ததில்லை.


அதேபோல் இஸ்லாமியர்களுக்கும், தமிழர்களுக்குமான முரண்பாட்டிற்கு மதம் அடிப்படை காரணமாக இல்லை இலங்கையில் தமிழ் கிறிஸ்தவனும், சிங்கள கிறிஸ்தவனும் யுத்தகளத்தில் ஒருவரோடு ஒருவர் மோதி செத்தார்கள் என்றால் இலங்கையில் மத முரண்பாடு இல்லை இன முரண்பாடே அடிப்படையாக இருக்கிறது.


ஆனால் சிவசேனை அமைப்பானதுவடக்கில் இந்துக்களுக்கு ஆபத்து என்ற அபத்தமான கோசத்துடன் இலங்கையில் கடைவிரிக்கும் திட்டத்துடன் கால்பதித்துள்ளது. ஈழத்தமிழர்களுக்கிடையில் மதப்பூசலை உண்டுபண்ணி அழிவுகளை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ள சிவசேனா அமைப்பானது. சிங்கள பெத்தர்களால் தமிழர் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இந்து ஆலயங்கள் மற்றும் அரசியல் கட்சி ஒன்றினால் வடக்கில் ஆயிரம் பௌத்த விகாரைகள் அமைக்கப்படும் என்ற தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராகவே மூச்சுக்கூட விடவில்லை என்பதுடன் இந்து ஆலயங்கள் மற்றும் திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கவில்லை என்பதும் உற்று நோக்கப்பட வேண்டிய ஒரு விடயமாக இருக்கின்றது.


இந்திய இந்துத்துவ சக்திகள் ஈழத்தமிழருக்குள் புகுந்து மதக்குழப்பங்களை ஏற்படுத்த துடித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் 2020 ஜனவரி வவுனியாவில் தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் சிவசேனா அமைப்பின் தவைர் மறவன்புலவு சச்சிதானந்தம் தலைமையில் இந்தியா மற்றும் மலேசியாவை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தீவிரவாத கொள்கையுடைய தலைவர்களை ஒருங்கிணைத்து அவசர கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இக்கலந்துரையாடலில் இந்தியா குஜராத்தில் மசூதி இடிப்பு வழங்கில் கைதாகி பதினாறு தடவைகள் சிறை சென்ற குருஜி ஒருவரும் பங்குபற்றியிருந்தார்.


இதில் கவலைதரும் விடயம் என்னவென்றால் வவுனியாவில் இனமத பேதமின்றி மக்களால் நேசிக்கப்படும் தமிழ் செயற்பாட்டாளரும், நற்சிந்தனையாளரும், கல்விமானுமாகிய ஒருவரும், சமூக செயற்பாட்டாளர் ஒருவரும் குறித்த கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர்.
சமூக ஏற்றத்தாழ்வையும், சாதிக் கொடுமையையும், பெண் அடிமைத்தனத்தையும் பேணி வளர்க்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பானது இந்தியாவிலிருந்து வவுனியாவரை வந்து வாய்பிளந்து நிற்கிறது. வவுனியாவில் எந்த இந்து ஆலயங்களும் தமது மண்டபங்களை சிவசேனை மாநாடு நடத்துவதற்கு வழங்க முன்வராத நிலையில் பெரும் பணச் செலவில் தனியார் நட்சத்திர விருந்தினர் விடுதியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.


இலங்கையில் போதைப்பொருள் பாவனை, பெண்களுக்கு எதிரான பாலியல் துஸ்பிரயோகங்கள், வாள் வெட்டு சம்பவங்கள் மற்றும் குடும்ப வன்முறைகள், பல்கலைக்கழகங்களில் பகிடிவதை கொடுமைகள், கள்ளத் தொடர்புகள் அதனால் சிசுக்கொலைகள் அதிகரித்துவரும் நிலையில் ஆன்மீக நிலையங்கள் அறநெறிப்பாடசாலைகள் தங்கள் சமூகக் கடமைகளை ஆற்ற தவறி நிற்கிறதா? என்ற கேள்வி எழுந்தள்ளது. ஈழத்தமிழ் இனம் திக்கு தெரியாமல் சிதறி நிற்கிற நிலையில் வவுனியாவில் பெரும் பணச்செலவில் நட்சத்திர விடுதியில் மாநாடு நடத்துவதற்கு பணம் வழங்கியவர்கள் யார்? என்ற கேள்வியை மக்கள் கேட்டு நிற்கின்றனர்.
வடக்கு மாகாணமானது கல்வியிலும், விளையாட்டிலும் கடைநிலையில் இருக்கும் நிலையில் வடக்கு மாகாணத்தில் இம்முறை தேர்தலில் சைவ வாக்காளர்களே வாக்களிப்பீர் சைவ வேட்பாளருக்கே என்று வெட்கமில்லாமல் விளம்பரம் செய்யும் அளவிற்கு சிவசேனை தன் முகத்தை

Comment Here

Guidelines to be Followed

#MinorMatters welcomes blog posts and articles that are original and thought provoking, written in a tone that is clear, respectful and engaging. All contributions will be curated prior to publication and contributors will be expected to adhere to the following guidelines as minimum standards for submission.

Accuracy

Only present as fact and/or information content that can be independently verified or content that is appropriately sourced from a reputed third party.

Fairness and thoroughness

Acknowledge that there may be multiple sides to any given issue and present your readers with information that is complete, comprehensive and contextual.

Privacy

We will not publish content that infringes a group or individual’s right to privacy, except in exceptional circumstances where there is a clear and valid public interest in doing so.

Transparency and accountability

Disclose your sources, deal openly with your readers and be accountable for what you submit.

Language

Be considerate of your readers. Do not use language that is obscene or explicit or racist. Do not employ threats, personal attacks or insults.

Disclaimer: the views and opinions expressed in each blog post belong solely to theirauthor and do not necessarily reflect the policies or position of #MinorMatters. Comments on the blog are the sole responsibility of their writers. #MinorMatters reserves the right to withhold publication of blog posts and comments that do not meet the website’s standards and requirements.