பெப்ரவரி 20, சமூக நீதிக்கான சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இலங்கையைப் பொறுத்தவரையில், சமூக நீதி என்பது அண்மைக்காலங்களில் மிகவும் அதிகமாக கலந்துரையாடப்படும் பேச்சுபொருளாக இருந்து வருகின்றது.

இலங்கையில் சமூக நீதி மற்றும் அது பற்றிய விடயங்கள் தமிழ் பேசும் மக்கள் மற்றும் சிறுபான்மை சமூகங்கள் (இனம்/மத/பாலின ரீதியில்) ஆகியவற்றை முன்னிலைப்படுத்தியே பேசப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வந்திருக்கின்றன.

 

யுத்தம் நிறைவடைந்து கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் நிறைவேறுகிறது. எனினும், அக்காலகட்டத்தில் மனித உரிமை மீறல்கள் மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல், யுத்தத்தின்போது காணாமல் போனவர்கள், கைது செய்யப்பட்டு எவ்வித விசாரணைகளுமின்றி தொடர்ந்தும் தடுப்புக்காவலில் இருக்கும் நபர்கள் ஆகிய விடயங்கள் தொடர்பில் அப்போதைய ஆட்சியாளர்களுக்கெதிரான குற்றச்சாட்டுக்கள் இன்றும், உள்நாட்டில் மட்டுமல்லாது, சர்வதேச ரீதியிலும் விடுக்கப்பட்டுள்ள. மேற்குறிப்பிட்ட பிரச்சினைகளுக்கு நீதி தேடும் பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் இன்னும் நடைபெற்றுக்கொண்டே இருக்கின்றன.

 

இன்றைய காலகட்டத்திலும் இரு முக்கிய விடயங்கள் தொடர்பாக சமூக நீதி தொடர்பான பேச்சுக்கள் இடம்பெறுகின்றன.

 

1. முஸ்லிம்களின் ஜனாஸாக்களைத் தகனம் செய்தல்.

2. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கோயில் நிலங்களை ஆக்கிரமித்தல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள்

 

தற்போதைய நிலையில் வெகுவாகப்பரவி வரும் கோவிட் 19 தொற்றின் காரணமாக நாட்டின் எல்லா மக்களுக்கும் பல்வேறு விதத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயினும், இந்நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த இஸ்லாம் மதத்தவரின் இறுதிக்கிரியை தொடர்பான சர்ச்சை தற்போது நிலவி வருகின்றது. 

தமது மதத்தின் அடிப்படையில் ஜனாஸாக்கள் புதைக்கப்பட வேண்டும் என்பது இஸ்லாம் மதத்தினருடைய வாதம். எனினும்  அதற்கான அனுமதியை அரசாங்கமோ அதிகாரிகளோ இன்னும் வழங்காது உள்ளனர்.

கோவிட் காரணமாக இறந்தவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டால் இவ்வைரஸ் நிலத்தடி நீருடன் கலக்க வாய்ப்புள்ளதாக சில கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டபோதும் இதுவரை அது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.

உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள் கூட உடல்கள் புதைக்கபடக் கூடாது எனக் கூறவில்லை.

இது தொடர்பாக ஆராய அரசு நிபுணர் குழு ஒன்றினை நியமித்துள்ள போதும், எவ்வித முடிவும் இது தொடர்பாக இன்னும் எட்டப்படவில்லை. முஸ்லீம் மக்களின் பெரும்பாலானவர்கள் இதனை தமக்கு எதிரான ஒரு செயற்பாடாகவே கருதுகின்றனர். கடந்த சில வருடங்களாக முஸ்லீம் மக்களுக்கு எதிராக பேரினவாத அமைப்புக்கள், சில அரசியல் கட்சிகள் ஆகியன மேற்கொண்ட பிரசாரங்கள் மற்றும் திக்கன, நீர்கொழும்பு உட்பட பல இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக ஏற்பட்ட கலவரங்களின் பின்னணியில் ஜனாஸாக்களை புதைப்பதை அனுமதிக்காததும் தமக்கு எதிரான ஒரு அடக்குமுறையாக முஸ்லிம்கள் கருதத்தொடங்கியுள்ளனர்.    

 

இது தொடர்பாக கடந்த மாதம் ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர்கள் அஹமத் ஷாஹீத் (மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரம்), பெர்னாண்ட் டீ  வேறென்னெஸ்  (சிறுபான்மையினர் விவகாரம்), கிளெமென்ட் நயாலெட்சோசி வூல் (அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமை), ட்லலெங் மொபோகெங்  (உடல் மற்றும் உள ஆரோக்கியம்) ஆகியோர், இலங்கையில் கொவிட் 19 தோற்று காரணமாக உயிரிழப்போரின் உடல்களை கட்டாய தகனத்துக்கு உட்படுத்துவதை நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்கள்.

 

இக்கொள்கை முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமெனவும், இது நாட்டின் முஸ்லிம்கள் மற்றும் இதர சிறுபான்மையினரின் நம்பிக்கைக்கு முரணானது எனவும் இவ்விசேட அறிக்கையாளர்களினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிபுணர்களின் இக்கருத்தானது ஜனாஸாக்களின் இறுதிக் கிரியை விடயத்தில் இலங்கையானது பாரபட்சமாக செயற்படுவதாக சர்வதேசம் கருதுவதை வெளிப்படுத்துகின்றது. ஆகையால் முஸ்லீம் சமூகத்துக்கான மக்களுக்கான நீதியான தீர்வை வழங்குவதற்கு அரசு கடமைப்பட்டுள்ளது.

 

 

இரண்டாவதாக, வடக்கின் பல பகுதிகளில் காணப்படும் இந்து ஆலயங்களை அகழ்வாராய்ச்சி என்னும் பெயரில் அபகரிக்கும் சம்பவங்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுவருகின்றது. கடந்த காலங்களில் முல்லைத்திவு நீராவியடி பிள்ளையார் கோவில் மற்றும் திருகோணமலை கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் கோவில் உட்பட பல கோயில் வளாகங்கள் பௌத்த பூர்வீக பூமி என உரிமைகோரி பௌத்த பிக்குகள் மற்றும் அகழ்வாராய்ச்சி திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் அவ்வளாகங்களை அபகரிக்க முயன்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் முல்லைத்தீவு குருந்தூர்மலையில் ஐயப்பன் சூலத்தை அகற்றி அவ்விடத்தில் புத்தரின் சிலையை அமைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து அவ்விடத்தில் பதட்டமான சூழல் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

 

முல்லைத்தீவு  மக்களைப்பொறுத்தவரையில் அவர்கள் யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து இன்னமும் முழுமையாக மீளாத ஒரு சூழல் காணப்படுகின்றது. பொருளாதார ரீதியிலும் உளரீதியாகவும் அவர்கள் இன்னும் பாதிப்புக்கு உள்ளானவர்களாகவே காணப்படுகின்றனர். இன்றும் இவர்கள் காணாமல் போன உறவுகளைத் தேடியும், கைதானவர்களை விடுவிக்கவும், தமது நிலங்களைப் பெற்றுக்கொள்ளவும் போராடிக்கொண்டு இருக்கின்றார்கள். இவற்றுக்கான பதில் ஆட்சியிலிருந்த அரசுகளினால் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில், அவர்களது பூர்வீக கோவில் நிலங்களை அபகரிப்பதையும் சிறுபான்மை சமூகத்தவரான தமக்கு எதிரான நடவடிக்கைகளாகவே பார்க்கின்றனர்.

 

ஆகையால் அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து சுமூகமான நிலை பேணப்படுவதற்கு அரசாங்கமும் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Comment Here

Guidelines to be Followed

#MinorMatters welcomes blog posts and articles that are original and thought provoking, written in a tone that is clear, respectful and engaging. All contributions will be curated prior to publication and contributors will be expected to adhere to the following guidelines as minimum standards for submission.

Accuracy

Only present as fact and/or information content that can be independently verified or content that is appropriately sourced from a reputed third party.

Fairness and thoroughness

Acknowledge that there may be multiple sides to any given issue and present your readers with information that is complete, comprehensive and contextual.

Privacy

We will not publish content that infringes a group or individual’s right to privacy, except in exceptional circumstances where there is a clear and valid public interest in doing so.

Transparency and accountability

Disclose your sources, deal openly with your readers and be accountable for what you submit.

Language

Be considerate of your readers. Do not use language that is obscene or explicit or racist. Do not employ threats, personal attacks or insults.

Disclaimer: the views and opinions expressed in each blog post belong solely to theirauthor and do not necessarily reflect the policies or position of #MinorMatters. Comments on the blog are the sole responsibility of their writers. #MinorMatters reserves the right to withhold publication of blog posts and comments that do not meet the website’s standards and requirements.